செய்திகள்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்-வதந்திகளை தவிர்த்து விடுங்கள்: சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

Published On 2016-09-29 16:37 GMT   |   Update On 2016-09-29 16:37 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து, அலுவலக பணிகளை கவனித்து வருவதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனிடையே முதலமைச்சரின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் இன்று வதந்திகள் பரவி வருகிறது. இதனால், வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் வீடு திரும்பி, தமது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமுடன் தான்  உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

Similar News