செய்திகள்

தமிழக முதல்வர் பூரண நலம் பெற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2016-09-26 17:12 GMT   |   Update On 2016-09-26 17:12 GMT
பெரம்பலூர் மாவட்ட ஜெயலதா பேரவை சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை அபிசேகம் ஆராதனையும் நடைபெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட ஜெயலதா பேரவை சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை அபிசேகம் ஆராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதி எம்.பி, சந்திர காசி, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி மாவட்ட நிர்வாகிகள் பூவை செழியன், ராஜாராம், செல்வகுமார், குலோந்துகன், ராணி, லட்சுமி, வீர பாண்டியன், யூனியன் சேர்மன்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ரமேஷ், அம்மா பேரவை நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வடிவேல், மோகன், கருணை ராஜா, சிறுவாச்சூர் முத்துசாமி, சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.கே..கார்த்திகேயன் செய்து இருந்தார்.

Similar News