செய்திகள்
இந்து முன்னணி பிரமுகர் கொலை: கோவை கலவரத்தில் கைதான 56 பேர் திருச்சி சிறையில் அடைப்பு
இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 56 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
திருச்சி:
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. சசிக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.
இதில் கோவையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மற்ற சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 56 பேர் நேற்று இரவு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இன்றும் பலர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.