செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2016-09-24 20:15 GMT   |   Update On 2016-09-24 20:15 GMT
மின்சார ரெயில் சேவையில் இன்று சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மூர்மார்க்கெட் காம்பிளக்ஸ் வளாகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்ப்பேட்டை நோக்கி மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் சில காரணங்களால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

காலை 9.50 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் (வண்டி எண்: 42018), சூலூர்ப்பேட்டையில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் (42406) கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.

அதேபோல மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.25, 11.35 மற்றும் பிற்பகல் 12.10 மணிகளில் கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்படும் மின்சார ரெயில்களும் கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.

இன்று முதல் அக்டோபர் 7-ந்தேதி வரையில் சூலூர்ப்பேட்டையில் இருந்து இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.45, நள்ளிரவு 2.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து முறையே இரவு 11.20, 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள், மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை மின்சார ரெயில் ஆகியவை கடற்கரை ரெயில்நிலையம் வழியாக செல்லும்.

இந்த நாட்களில் ஆவடியில் இருந்து சூலூர்ப்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் மறுமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News