செய்திகள்

திருக்கனூர் அருகே வி‌ஷம் குடித்து ஆசிரியை தற்கொலை

Published On 2016-09-22 10:27 GMT   |   Update On 2016-09-22 10:27 GMT
திருக்கனூர் அருகே வி‌ஷம் குடித்து தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே தமிழக பகுதியான பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவரது மகள் மகேஷ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

மகேசுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாமல் அவ்வப்போது மகேசுக்கு அவஸ்தை அளித்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ் கூனிச்சம்பட்டில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதித்தது. இதனால் மனம் உடைந்த மகேஷ் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சு கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டார்.

இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மகேஷ் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News