செய்திகள்

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு

Published On 2016-09-21 03:49 GMT   |   Update On 2016-09-21 03:49 GMT
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரனும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும் (குண்ணவாக்கம், உத்திரமேரூர் ஒன்றியம்), குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரனும் (எழிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர்), ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் ஓ.ராஜமாணிக்கமும் (சாலமங்கலம் கிளைக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News