சோமனூரில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வடமாநில வாலிபர் கைது
கவுண்டம்பாளையம்:
கோவை சோமனூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது 8 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அதன்பின்னர் நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், மகளை தேடி சென்றார். அப்போது சிறுமி அழுது கொண்டே திரும்பி வந்து கொண்டிருந்தார்.
சிறுமி, தன்னை ஒரு வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தை தெரிவித்தார்.
இதைதொடர்ந்து இந்த சம்பவம் பற்றி துடியலூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசார் விசாரணையில் அதே பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வரும் ரவிகாந்தா (27) என்ற வாலிபர் தான், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதைதொடர்ந்து வாலிபர் ரவிகாந்தாவை போலீசார் கைது செய்தார். ரவிகாந்தாவின் சொந்த ஊர் ஒரிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் துவாகா கிராமம் ஆகும்.