செய்திகள்

மதுரை - ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 வக்கீல்கள் சஸ்பெண்டு

Published On 2016-07-25 09:12 GMT   |   Update On 2016-07-25 09:12 GMT
மதுரை - ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 வக்கீல்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:

தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அகில இந்திய பார்கவுன்சில் தமிழகத்தில் உள்ள 126 வக்கீல்களை சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் மதுரை வக்கீல்கள் ஷாஜி செல்லம், எழிலரசு, பாஸ்கர் மதுரம், வாமணன், ஜான் வின்சென்ட், வில்லவன் கோதை, முத்து அமுதநாதன் ஆகிய 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வக்கீல்கள் குணசேகரன், நம்புநாயகம், முத்துராமலிங்கம், அசரத் ஹுசைன் அகமது மதானி, பாலா ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News