உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே 2 இளம்பெண்கள் மாயம்

Published On 2022-11-22 04:29 GMT   |   Update On 2022-11-22 04:29 GMT
  • குடும்ப பிரச்சினையில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
  • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கள்ளிப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்த பாண்டி மனைவி கனிமொழி(25). கருத்துவேறுபாடு காரணமாக கனிமொழி கணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 11-வது வார்டை சேர்ந்த கண்ணன் மகள் பூஜா(19). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்றுவீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News