உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

Published On 2022-08-03 07:09 GMT   |   Update On 2022-08-03 07:09 GMT
  • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
  • இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சித்தைய ன்கோட்டை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி மகன் சின்னத்துரை (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக கூறி நெருங்கி பழகி வந்தார். இதில் சிறுமி 8 மாத கர்ப்பிணியானர்.

அதன் பிறகு திருமண த்துக்கு மறுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சின்னத்துரையை கைது செய்தனர்.

நத்தம் டவுன் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (56). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News