உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பிரபல ரவுடிகள் கைது

Published On 2022-06-16 09:13 GMT   |   Update On 2022-06-16 09:13 GMT
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் நல்லுசாமி கவுண்டர் காட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). இவர் வீராணத்தில் நடந்த கொலை வழக்கில் கைதானவர். இதேபோல் சேலம் ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் சுரேஷ் (24). இவர் தீவட்டிப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர். ரவுடிகளான இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்து கிச்சிப்பாளையத்தில் பதுங்கியிருந்து, வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை ெஜயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News