உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே வாலிபரை கொன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-07 07:11 GMT   |   Update On 2022-08-07 07:11 GMT
  • திருவெண்ணைநல்லூர் அருகே வாலிபரை கொன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்டகலெக்டர் மோகனுக்கு பரிந்துரை செய்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 20). இவரை கடந்த மாதம் டி.எடையார் பகுதியை சேர்ந்த சரத்ராஜ் (21). கண்டாச்சிபுரம் அருகே உள்ள அருளவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (19). ஆகியோர் அழைத்து சென்றனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து அருணை கொன்று உடலை கிணற்றில் வீசினர். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து சரத்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். எனினும் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்டகலெக்டர் மோகனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் சரத்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News