உள்ளூர் செய்திகள்

விஜயநாராயணபுரம் விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த காட்சி.

உடன்குடி அருகே விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2022-09-09 08:26 GMT   |   Update On 2022-09-09 08:26 GMT
  • உடன்குடிஒன்றியம் சீர்காட்சிபஞ்சாயத்து உட்பட்ட விஜய நாராயண புரத்தில் ஊர் மக்கள் இங்குள்ள விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடத்தினர்
  • நாட்டில் வறுமை நீங்கிடவும், நல்ல மழை பொழிந்து நாடு செழிக்கவும்விவசாயம் வளரவும் வேண்டி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

உடன்குடி:

உடன்குடிஒன்றியம் சீர்காட்சிபஞ்சாயத்து உட்பட்ட விஜய நாராயண புரத்தில் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து இந்து அன்னையர் முன்னணி தலைவி பட்டுரோஜா தலைமையில் இங்குள்ள விநாயகர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடத்தினர்.

நாட்டில் வறுமை நீங்கிடவும், நல்ல மழை பொழிந்து நாடு செழிக்கவும்விவசாயம் வளரவும் வேண்டி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.

இதில் துணைத் தலைவி பேச்சம்மாள், செயலாளர் முத்துலட்சுமி, பொருளாளர் சரஸ்வதி, மகேந்திரன் சுதாகர் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கேசவன் கலந்து கொண்டு ஆன்மீகம்சம்பந்தமான புராணங்கள், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும். தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு இந்துக்களின் வரலாறு களைகூற வேண்டும் என்றும், தினசரி ஒரு முறை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றும் பல்வேறு அறிவுரை வழங்கினார். ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News