செய்திகள்
வாக்களித்ததற்கான அடையாள மை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 மணி நிலவரப்படி 61.38 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2021-04-06 12:53 GMT   |   Update On 2021-04-06 12:53 GMT
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 6 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூர்:

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர்  மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும்  6 மணி நிலவரப்படி 61.38 சதவீத வாக்குகள்  பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
 
மேட்டுப்பாளையம் - 59.83%
சூலூர் - 67.95%
கவுண்டம்பாளையம் - 60.31%
கோயம்புத்தூர் (வடக்கு) - 53.50%
தொண்டாமுத்தூர் - 64.66%
கோயம்புத்தூர் (தெற்கு) - 55.44%
சிங்காநல்லூர் - 56.41%
கிணத்துக்கடவு - 64.24%
பொள்ளாச்சி - 71.48%
வால்பாறை - 63.17%
Tags:    

Similar News