செய்திகள்
திமுக-பாஜகவினர் இடையே மோதல்

அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் திமுக- பாஜக-வினர் இடையே வாக்குவாதம்

Published On 2021-04-06 11:01 GMT   |   Update On 2021-04-06 11:01 GMT
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வாக்குச்வாவடியில் திமுக- பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா- திமுக போட்டியிடுகிறது. இத்தொகுதியின் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் கொரோன தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் திமுக-விற்கு சாதகமாக வாக்களிக்க வாக்காளர்களை உதவியாக பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் வாக்குச்சாவடியில் இருந்த திமுக பூத் நிர்வாகிகள் திமுகவிற்கு விழக்ககூடிய வாக்குகளை குறைப்பதற்காக பாஜக வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்புகிறார்கள் எனக் குற்றம்சாட்டினர்.

இதனால் கைகலப்பு ஏற்படும் அளவிற்கு பிரச்சினை சென்றது. பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News