என் மலர்tooltip icon

    டெல்லி

    • பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை அறிக்கையை நாங்கள் பார்த்துள்ளோம். சி.பி.ஐ. வெளிப்படுத்தியிருப்பது உண்மையிலேயே கவலை அளிக்கிறது.. படித்ததைக் கண்டு நாமே கலக்கம் அடைந்துள்ளோம். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் விவரங்கள் வெளியிடப்படவில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்.
    • 22-ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.

    செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
    • இந்தப் புயல் வியட்நாமை கடுமையாக தாக்கியது.

    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

    இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

    இதில் ஜெனரேட்டர், தற்காலிக டென்ட், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார்
    • 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது

    டிசம்பர் 4, 2021 - நாஜிலாந்தில் மோன் [mon] மாவட்டத்தில் உள்ள ஓடிங் [Oting] கிராமத்தில் சுரங்க பணியாளர்களை ஏற்றிச் சேர டிரக் வாகனத்தின் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஊடுருவல்காரர்கள் என நினைத்துத் தவறுதலாகத் தாக்கியதாக ராணுவ வீரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் ராணுவ வீரர்களின் முகாம்கள் முன்னர் திரண்டு 250 க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தது. இது தவுறுத்தலாக நடந்துவிட்டது என்று மக்களவையில் அமித் ஷா கூறியிருந்தார். மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்துத் தாக்குதலில் தொடர்புடைய 30 ராணுவ வீரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 30 ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் அவர்கள் மீது ராணுவத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீதான கிரிமினல் வழக்கு நீக்கம் நாட்டில் பொதுமக்களின் உயிர்கள் மீதான மதிப்பு இவ்வளவுதானா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    • ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர்
    • ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

    பாஜகவினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு இந்தியாவில் உள்ள சூழல் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக சாடினர்.

    ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மையான பயங்கரவாதி என்றும் அவரின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத் தொகை அளிப்பதாக அறிவிக்கும் அளவுக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக பேசியிருத்த நிலையில் இதை கண்டித்து கார்கே தற்போது மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    கார்கே தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது,

    நமது நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் ஏற்பட்டுள்ள நேரடி பிரச்சனையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கூறப்பட்ட ஆட்சேபனைக்குரிய வன்முறையான கருத்துக்கள் கூறப்பட்டது உங்களின் கவனத்துக்கு வந்திருக்கும். மத்திய ரெயில்வே இணை அமைச்சர் [ரவ்நீத் பிட்டு], உத்தரப்பிரதேசம் பாஜக அமைச்சர்[ரகுராஜ் சிங்], ஆகியோர் ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர். உங்களின் கட்சியை சேர்ந்த மகாராட்டிர எம்.எல்.ஏ ராகுலின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

    டெல்லி பாஜக முன்னாள் எம்.எல்.ஏ, ராகுலின் பாட்டிக்கு ஏற்பட்ட விதிதான் ராகுலுக்கு ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். உலகத்துக்கு அகிம்சையையும், அன்பாயும் போதிக்கும் இந்தியாவில் பொது வாழ்கையில் இருப்பவர்கள் எப்படி கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உதாரணமாக விளங்கினர். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே உள்ள பிரச்சனைகள் ஆரோக்கியமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

    ஆனால் தற்போது பாஜக தலைவர்கள் பரப்பி வரும் வெறுப்பு நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர்கள் மீது நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . வருகாலங்களில் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோல பேசாமல் இருக்க அவர்களுக்கு மரியாதையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
    • கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வி அமைச்சர் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார்.

    ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

    முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரியுள்ளார். மேலும், இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். 

    • இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்
    • அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

    கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.


    • ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்.
    • கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும்.

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன்மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் BR கவாய், KV விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும் பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் ஏன் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் பொதுஇடம், நடைபாதை, ரயில்வே தடம் மற்றும் நீர்வழிப்பாதை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

    • 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
    • 2013 டிசம்பரில் முதல்வரான கெஜ்ரிவால் 2014 பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார்

    ?எம்.எல்.ஏ கெஜ்ரிவால் 

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 6 மாத திகார் சிறைவாசத்தின் பின் ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி முதலமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். இதன்படி கெஜ்ரிவால் தனத்துக்கு எதிரான ஊழல் வழக்கை முதல்வராக அன்றி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவாக எதிர்கொள்ள உள்ளார்.

    தலைநகரும் அரசியல் சதுரங்கமும்

    தலைநகர் டெல்லிக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதை முன்கூட்டியே வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுடன் நடந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அன்னா ஹசாரேவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய கெஜ்ரிவால் சுமார் 10 வருட காலமாக டெல்லியில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளில் நாற்காலி கனவை கனவாகவே நிருத்தி வைத்துள்ளார்.

    கெஜ்ரிவால் ராஜினாமா மூலம் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்துவது இது முதல் முறை அல்ல. ஒரு புதிய கட்சியாக பழம்பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தேசத்தின் தலைநகரில் ஆட்சியைப் பிடிப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் நகர்வுகள் மூலம் சாத்தியமாகிக் காட்டினார்.

     

    கெஜ்ரிவாலின் அரசியல் கணக்கு 

    6 மாத காலமாகச் சிறைக்குள் இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தொடராமல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் அப்போதெல்லாம் அன்றி தற்போது ஜாமீனில் வெளி வந்த 2 நாட்களுக்கு உள்ளாகவே ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதற்குப் பின்னால் அரசியல் இல்லாமலில்லை.

    ஜனாதிபதி ஆட்சி, ஊழல் முதல்வர் என பாஜக பயன்படுத்தி வந்த அத்தனை கார்டுகளையும் மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்து ராஜினாமா என்ற ஒரே கார்டில் தவிடுபொடி ஆக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    2013 இல் முதல்முறையாக பாஜகவின் டெல்லி கனவுக்கு நடுவே கெஜ்ரிவால் முட்டுக்கட்டையாக வந்தார். 15 வருட காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு ஆட்சி அமைக்க காத்திருந்த பாஜகவின் கனவு 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி 28 தொகுதிகளைக் கைப்பற்றித் தொங்கு சட்டசட்ட சபை அமைத்ததன் மூலம் தகர்ந்தது. ஆளுநர் அழைப்பு விடுத்தும் ஸ்திரத்தன்மை இல்லாததால் ஆட்சி அமைக்க பாஜக பயந்தது.

    காங்கிரசின் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சேர்ந்து டெல்லியில் முதல்முறையாக ஆட்சியமைத்து முதல்வர் ஆனார் கெஜ்ரிவால். ஆனால் அந்த அரசு 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. டிசம்பர் 30 2013 இல் முதல்வரான கெஜ்ரிவால் பிப்ரவரி 2014 இல் பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை ஆம் ஆத்மி வலியுறுத்தியதால் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களை எதிர்ப்பதாக தனது ராஜினாமா உரையில் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன்பின் டெல்லி தற்காலிகமாக மத்திய காட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

    மீண்டும் தேர்தல்

    இதன்பின் மீண்டும் தேர்தல் நடந்த வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து வந்தது. எனவே சரியாக ஒரு வருடம் கழித்து 2015 ஆம் ஆண்டு மீண்டும் வந்தது தேர்தல். இதில் டெல்லி கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தது. அதுவும் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதற்கு கெஜ்ரிவால் பாஜகவுக்கு பதவியை பொருட்படுத்தாமல் ராஜினாமா செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றதே காரணம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜகவின் கனவு மீண்டும் சிதறியது. தொடர்ந்து 2020 இல் நடந்த தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார் கெஜ்ரிவால்.

     

    மீண்டும் ராஜினாமா 

    இந்த நிலையில்தான் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கு ஆம் ஆத்மி மீது விடிந்தது. மணீஷ் சிசோடியா முதலில் சிறை சென்றார்.தொடர்ந்து கடந்த மார்ச் 21 அன்று கெஜ்ரிவாலும் கைதானார் இந்நிலையில் மீண்டும் ராஜினாமா அஸ்திரத்தை கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளதால் அவரை முன்னிறுத்தி ராஜினாமா செய்யாத ஊழல் முதல்வர் என வர இருக்கும் தேர்தலில் பாஜக முத்திரை குத்த வழி இல்லாமல் ஆகியுள்ளது. அதற்கு பதிலாக ஆக்ஸ்போர்டில் படித்த நிர்வாகத் திறன் வாய்ந்த முதல்வர் என்ற அதிஷியின் பிம்பம் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கை கொடுக்கும். மேலும் ஊழல்வாதி என்ற பிம்பத்தில் இருந்து குறிவைக்கப்பட்டவர் என்ற  பிம்பத்துக்கு கெஜ்ரிவால் டிரான்சிஷன் ஆவதும் குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

    இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தலைமை செயலகத்துக்கு செல்ல கூடாது. எந்த கோப்புகளிலும் கையெழுத்திட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது.


    ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய போவதாக திடீரென அறிவித்தார். மக்கள் என்னை நேர்மையானவர் என கருதி மீண்டும் வெற்றி பெற வைத்தால் மட்டுமே முதல்-மந்திரி நாற்காலியில் அமருவேன் என அவர் சபதமிட்டார். கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டதால் முன்னாள் துணை-முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ராகவ் சதா ஆகியோர் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது முதல்-மந்திரி பதவி யாருக்கு கொடுக்கலாம் என விரிவாக ஆலோசித்தனர்.

    இது பற்றி கெஜ்ரிவால் கட்சியின் மூத்த தலைவர்கள், மந்திரிகள் மற்றும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களையும் கெஜ்ரிவால் தனித்தனியாக சந்தித்து பேசினார். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

    இன்று 2-வது கட்டமாக கெஜ்ரிவால் தனது இல்லத்தில் மீண்டும் அரசியல் விவகார குழு உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 57 பேரும் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பதவிக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்து வரும் அதிஷி பெயரை கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இதனை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகல் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மலிவால், புதிய முதலமைச்சர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    தனது எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மலிவால் கூறியிருப்பதாவது:-

    இன்றைய நாள் டெல்லிக்கு மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதல்வராக்கப்படுகிறார்.

    அதிஷி குடும்பத்தை பொறுத்தவரை அப்சல் ஒரு நிரபராதி. மேலும், அப்சல் குரு மீதானது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு.

    அதிஷி வெறும் டம்மி முதல்வர்தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர்.
    • பாஜக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.

    டெல்லி அரசியல் 

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து ஜாமீனில் வந்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பொறுப்புக்கு அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் சிறையிலிருந்த சமயத்தில் அரசை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றிய அதிஷி தற்போது முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த சமயத்தில் அதிஷியின் கல்வி மற்றும் அரசியல் பின்புலம் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    ஆக்ஸ்போர்டு பட்டதாரி

    டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிர்களாக இருந்த விஜய் குமார் சிங், திரிபா வாஹி தம்பதிக்கு ஜூன் 8, 1981 ஆம் ஆண்டு பிறந்த அதிஷி, st. ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டமும் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2 முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட அதிஷி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் ஆர்கானிக் விவசாயம் மற்றும் கல்வி அமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்த 7 வருடங்களை கழித்துள்ளார்.

    ஆம் ஆத்மி பிரவேசம் 

    கடந்த 2012 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதும் அதில் உறுப்பினராகச் சேர்ந்த அதஷி அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆம் ஆத்மி கொள்கைகளை வடிவமைப்பு குழுவில் முக்கிய பங்காற்றிய அதஷி தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்களில் மக்களுக்கு பரிட்சியமான முகமாக மாறத் தொடங்கினார்.

     மார்லெனா

    அதிஷியின் முழு பெயர் அதஷி மார்லெனா சிங் [ Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.

    தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [ கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக போது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தார். தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.

    ஆட்சியில் பங்கு 

    தொடர்ந்து டெல்லி கல்வி அமைச்சக ஆலோசகராகச் செயல்பட்ட அதிஷி கல்காஜி தொகுதியில் 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ஆகியோர் சட்ட சிக்கல் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்வி அமைச்சராகவும் பு பொதுப்பணித் துறை, மின்சக்தி மற்றும் சுற்றுலாத்துறை பொறுப்புகளை நிர்வகித்து வந்தார்.

    முன்னதாக மணீஷ் சிசோடியா துணை முதல்வராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராகச் செயல்பட்ட சமயத்திலேயே டெல்லி அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்த அதிஷி பள்ளிகள் மற்றும் பாடத்திட்டத்தில் தரத்தை உயர்த்தினார். மேலும் தனது சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தினார் அதிஷி. இந்நிலையில் தற்போது முதல்வராக அதிஷியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர்.
    • அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது "பாதுகாப்பை கருதி பெண் மருத்துவர்கள் இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    "பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது. பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்களது கடமை.

    இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

    ×