என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லி கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.

    டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.

    டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • விபத்தில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டெல்லி கரோல் பாக்கில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிநத் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காலை 9.11 மணிக்கு தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இதுவரை குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    • சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
    • வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

    சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.

    இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

    2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதீய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தொலைத் தொடர்புத் துறை அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் நேர்மறையான ஆதரவையே வழங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது
    • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து வந்தது.

    தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர்
    • ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுவதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மிரட்டல் விடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் பொது செயலாளரான அஜய் மக்கான் துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மக்கான் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அஜய் மக்கான் கூறுகையில் "மறைந்த இந்திரா காந்தி, மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரை நாட்டிற்கு தியாகம் செய்தனர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு பிறகும் கூட இதுபோன்ற மிரட்டலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுகிறார். பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டி மக்களை பற்றி பேசுகிறார். இது பாஜக-வினருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த காங்கிரஸ்ட் கட்சி. நாங்கள் பயப்படமாட்டோம். பணிந்து செல்லமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

    "நீங்கள் நன்றாக நடந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் பாட்டிக்கு (இந்திராகாந்தி) நடந்ததை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என கடந்த செப்டம்பர் 11-ந்தேதி மார்வாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்கியில் பகிரங்க சவால் விடப்பட்டது.

    ஏக்நாத ஷிண்டே சிவசேனா கட்சி எம்எல்ஏ கெய்க்வாட் "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாக்கை துண்டிப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என அறிவித்திருந்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ரவ்னீத் பிட்டு, "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என குற்றம்சாட்டியிருந்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் நாடு முழுவதும் அமைதியை சீர்குலைப்பது, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள் பேச்சு இருப்பதாக அந்த புகாரில் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

    • லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
    • அந்த காலக்கட்டத்தில் வேலைக்குப்பதிலாக நிலங்களை குறைந்த விலையில் பெற்றதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மகன் தேஜஸ்வி யாதவ். இவர் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் ஆவார்.

    இவர்கள் இருவர் உள்பட பலர் வேலைக்காகச நிலங்கள் பெற்றது தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அக்டோபர் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 6-ந்தேதி தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

    லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது மேற்கு மத்திய மண்டலம் ரெயில்வேயின் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் குரூப்-டி நியமனம் உருவாக்கப்பட்டபோது, வேலைக்கு பதிலாக நிலங்களை விண்ணப்பத்திவர்களிடம் இருந்து லாலு பிரசாத் குடும்பம் அல்லது கூட்டாளிகள் குறைந்த விலைக்கு பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

    • டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
    • கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.

    டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.

    இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.

    இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.

    • பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
    • இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள், ஜம்முவில் உள்ள 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில் "மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது. பாஜக ஜம்மு-காஷ்மீரில் தோற்கடிக்கப்படும்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பயங்கரவாதி என பாஜக தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விசயத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மவுனம் காத்து வருகின்றனர்" என்றார்.

    • மணிப்பூர் மாநில முதல்வர் இன்னும் ஏன் பதவியில் நீடிக்கிறார்?
    • பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வாரா? என நிருபர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அவர் 3-வது முறையாக பதவி ஏற்று நேற்றுடன் 100 நாள் நிறைவடைந்தது. 100 நாட்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள், நாட்டின் வளர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் அமித் ஷாவிடம் "வன்முறை தொடர்ந்து நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பிரேன் சிங் தொடர்ந்து நீடித்து வருவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமித் ஷா "நீங்கள் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் விவாதம் கூடாது" என்றார்.

    மேலும், "பிரதமர் மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மணிப்பூருக்கு செல்வாரா?" என்று கேள்வி கேட்டார். அதற்கு "அதுபோன்ற முடிவு ஏற்பட்டால், கட்டாயம் உங்களுக்கு தெரியும்" என அமித் ஷா பதில் அளித்தார்.

    மணிப்பூர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்து தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த வன்முறைக்கு 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    கடந்த இரண்டு வாரங்களாக மோதல் அதிகரித்துள்ளது, கிளர்ச்சி குழுக்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    • ஏலம் விடப்பட்டு கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
    • பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.

    நேற்று பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, 6-வது முறை ஏலம் விடும் நிகழ்வு தொடங்கியது. இந்த முறை அவருக்கு பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஏலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்னணு ஏலத்தில் பங்கேற்க, https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    • தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது.
    • சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

    இந்த நிலையில், தங்க இறக்குமதி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருமடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது. அது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 84 ஆயிரத்து 296 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இரு மடங்கிற்கும் கூடுதலாகும்.

    சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து 16 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

    மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

    ×