என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayan"

    • தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
    • இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து இந்தியா- ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானுக்கு பயிற்சி பெற அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விண்வெளி ஆய்வில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    இந்த விண்வெளி திட்டம் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று இரவு ஜப்பான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் 2-வது நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கி ணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    சென்டாய் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உலக புகழ் பெற்ற புல்லட் ரெயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. அந்த பயிற்சி மையத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான பயிற்சியை இந்தியர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அதன் பிறகு மற்ெறாரு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய உணவு விருந்து அளித்தார். அத்துடன் பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.

    இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் மற்றும் அதிகாரிகளிடம் விடை பெற்ற பிரதமர் மோடி இன்று பிற்பகல் டோக்கியோவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளாா்.

    2018-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக் கிடையே, சீன அதிபா் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    சீனாவில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவுடனான பல்வேறு ஒத்துழைப்பு விஷயங்கள் விசயமாக பேச உள்ளார்.

    பிரதமர் மோடி சீனா பிரதமரை 2 தடவை சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவைக் குறி வைத்து வரி விதித்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரி வித்த சீனா, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. எல்லை விவகாரத்திலும் இந்தியாவுடன் இணக்கமான பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான சந்திப்பு மிகுந்த முக்கியத்து வம் பெற்றுள்ளது.

    ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ் தான், கிர்கிஸ்தான், தஜி கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்க ளாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.

    அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைக ளால் பல நாடுகளில் பதற் றம் நிலவுகிறது. இது தவிர உக்ரைன்-ரஷியா போர், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் ஆகியவையும் தொடர்ந்து தீவிரமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் முக்கிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் அமெ ரிக்கா உள்பட பல நாடு களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.

    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • மானாமதுரையில் பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் நர்சரி ப்ரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு சந்திரயான் 3 பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
    • வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

    சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.

    இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

    2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
    • சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

    இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.

    நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.

    இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

    இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

    விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ×