

புதுடெல்லி:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை அறிக்கையை நாங்கள் பார்த்துள்ளோம். சி.பி.ஐ. வெளிப்படுத்தியிருப்பது உண்மையிலேயே கவலை அளிக்கிறது.. படித்ததைக் கண்டு நாமே கலக்கம் அடைந்துள்ளோம். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் விவரங்கள் வெளியிடப்படவில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.