லைஃப்ஸ்டைல்

முளைகட்டிய தானியம் ஸ்டஃப்டு சப்பாத்தி

Published On 2018-01-04 06:01 GMT   |   Update On 2018-01-04 06:01 GMT
முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சப்பாத்தியை அடிக்கடி சாப்பிட்டு வர சத்துக்குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.
தேவையான பொருட்கள் : 

பச்சைப்பயறு - ஒரு கப், 
கம்பு - ஒரு கப், 
ராகி - ஒரு கப், 
கொண்டைக்கடலை - ஒரு கப், 
கோதுமை மாவு - கால் கிலோ, 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். 

கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். 

பிசைந்த மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதன் நடுவில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, நன்றாக மூடி சப்பாத்திக் கல்லில் வைத்து மெதுவாக தேய்த்து வைக்கவும். 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த பரோட்டாவை போட்டு இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

அருமையான முளைகட்டிய தானியம் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக்குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News