லைஃப்ஸ்டைல்

சளிக்கு நிவாரணம் தரும் தனியா சூப்

Published On 2017-11-27 06:33 GMT   |   Update On 2017-11-27 06:33 GMT
மழை காலத்தில் வரும் சளி, இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் அளிக்கும் தனியா சூப். இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்
தனியா - கால் கப்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
தண்ணீர் -2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீரகம், தனியா, மிளகு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த தண்ணீர் கலவையுடன் உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டும்.

நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான கொத்தமல்லி சூப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News