லைஃப்ஸ்டைல்

முளைகட்டிய சிறுதானிய முருங்கைக் கீரை அடை

Published On 2017-10-06 03:31 GMT   |   Update On 2017-10-06 03:31 GMT
விரைவில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். இன்று சிறுதானிய அடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - கால் கப்,
கேழ்வரகு - கால் கப்,
சோளம் - கால் கப்,
கொள்ளு - கால் கப்,
பாசிப் பயறு - கால் கப்,
குதிரைவாலி - கால் கப்,
சாமை அரிசி - கால் கப்,
வரகரிசி - கால் கப்,
முழு கறுப்பு உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
முருங்கைக் கீரை - 2 கைப்பிடி,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - 10 பல்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைக்கவும்.

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை இவற்றை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.

முளை கட்டிய சிறுதானியங்களுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவை அடையாக, ஊற்றி அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தால், சுவையான முளைகட்டிய சிறுதானிய முருங்கைக் கீரை அடை ரெடி!   

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News