லைஃப்ஸ்டைல்

புத்துணர்ச்சி தரும் தக்காளி எலுமிச்சை ஜூஸ்

Published On 2017-09-08 05:33 GMT   |   Update On 2017-09-08 05:33 GMT
தினமும் காலையில் பழங்கள், காய்கறிகளில் செய்த ஜூஸ் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று தக்காளி எலுமிச்சை ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தக்காளி - ஒன்று ( பொடியாக நறுக்கவும்),
இந்துப்பு - சிட்டிகை,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
மிளகு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்.



செய்முறை :

தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்

மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

சூப்பரான சத்தான தக்காளி எலுமிச்சை ஜூஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News