லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சிவப்பு அரிசி புட்டு

Published On 2017-07-23 05:25 GMT   |   Update On 2017-07-23 05:25 GMT
சிவப்பு அரிசியில் இட்லி, தோசை, அடை, புட்டு, கொழுக்கட்டை, கூழ் போன்றவற்றை ருசியாக செய்யலாம். இன்று சிவப்பு அரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - 100 கிராம்,
சிவப்பு அவல் - 100 கிராம்,
துருவிய தேங்காய் - ஒரு கப்,
வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு - தலா 25 கிராம்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு.

செய்முறை:

கழுவி காயவைத்த சிவப்பு அரிசியுடன், அவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய தேங்காய் சேர்த்து உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.

வெந்த புட்டு கலவையில் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் மற்றும் பொடித்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சத்தான சுவையான சிவப்பு அரிசி புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News