லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் ஓட்ஸ் கார புட்டு

Published On 2017-06-09 03:33 GMT   |   Update On 2017-06-09 03:33 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸை வைத்து கார புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
தக்காளி - 1
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
சூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க :

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கு



செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

* இட்லி பாத்திர தட்டில் ஓட்ஸை போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாயை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சத்தான சுவையாக ஓட்ஸ் கார புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News