லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான பனிவரகு கார அடை

Published On 2017-06-06 03:37 GMT   |   Update On 2017-06-06 03:37 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு அரிசியை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

பனிவரகு - 250 கிராம்.
கடலைப்பருப்பு - 50 கிராம்.
துவரம் பருப்பு - 100 கிராம்.
காய்ந்த மிளகாய் - 10.
உப்பு - தேவையான அளவு.
சோம்பு - 3 ஸ்பூன்.
பெருங்காயம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
நறுக்கிய வெங்காயம் - 1 கப்.
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



செய்முறை :

* பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த கலவையுடன் மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* அடுத்து அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

* சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News