லைஃப்ஸ்டைல்

பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

Published On 2017-05-09 05:23 GMT   |   Update On 2017-05-09 05:23 GMT
பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நார்த்தங்காய் - ஒன்று,
மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - சிறிதளவு,
சாதம் - ஒரு கப்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* நார்த்தங்காயை இரண்டாக நறுக்கி வைக்கவும். இரண்டு மூடியிலும் மிளகுத்தூள், சீரகத்தூளை தூவி, அடுப்பு பக்கத்தில் அனலில் வைக்கவும் (15 நிமிடம்).

* வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து, சாதத்தில் சேர்த்து நன்றாக கிளறவும்.

* கடைசியாக அனலில் வைத்த நார்த்தங்காயை எடுத்து சாறு பிழிந்து, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சூப்பரான நார்த்தங்காய் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News