லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்

Published On 2017-05-04 03:45 GMT   |   Update On 2017-05-04 03:45 GMT
கோடை காலத்தில் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
தக்காளி - 2
பாசிப்பருப்பு - 1 1/2 கப்
 
தாளிக்க :

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு
உளுந்தம் பருப்பு
சீரகம்
வெங்காயம் - 1
 
பொடி வகைகள் :

சீரக பொடி  - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி  - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 
செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*  பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும், மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.

* முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கீரையில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* சத்தான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.
 
* இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News