லைஃப்ஸ்டைல்

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

Published On 2017-03-28 07:34 GMT   |   Update On 2017-03-28 07:34 GMT
ஆரஞ்சுத் தோல் டீ சருமப் பிரச்சனைகளை நீங்கும். சருமம் பளபளப்பு பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆரஞ்சுத் தோல் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
தேன் - 2 டீஸ்பூன்.



செய்முறை:

* ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும்.

* இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

* பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News