லைஃப்ஸ்டைல்

சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம்

Published On 2017-03-27 03:34 GMT   |   Update On 2017-03-27 03:34 GMT
நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி அரிசி இதயத்துக்கு வலு சேர்க்கும். குதிரைவாலி அரிசியில் சுவையான சத்தான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை  - 1/2  கப்
உளுந்தம்பருப்பு  - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 4
கேரட் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு,
உளுந்தம் பருப்பு,
சீரகம்,
சுக்கு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,
கொத்துமல்லி



செய்முறை :

* குதிரைவாலி அரிசி, திணை, உளுந்தம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் ஊறவைத்த பின் இட்லி மாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 4 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த  மிளகாய், சுக்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து துருவிய கேரட்டை போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும்.

* பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான காலை டிபன் குதிரைவாலி பணியாரம் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News