லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கேரட் - கம்பு அடை

Published On 2017-02-13 07:25 GMT   |   Update On 2017-02-13 07:25 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கம்பு - 1 கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
துருவிய கேரட் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.

* உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.

* புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சத்தான சுவையான கேரட் - கம்பு அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News