லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

Published On 2017-02-07 03:33 GMT   |   Update On 2017-02-07 03:33 GMT
உளுந்து இடுப்பு, மூட்டு வலிகளுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி உளுந்தில் செய்த உணவை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உளுந்து கார புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உளுந்து - 1 கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

கடுகு, உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை இட்லி சட்டியில் இட்லிகளாக ஊற்றி வேக வைத்து வெந்ததும் ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் உதிர்த்து வைத்துள்ள உளுந்து இட்லியை போட்டு நன்றாக கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல், கொத்தமல்லியை போட்டு உதிரியாக வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான உளுந்து கார புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News