லைஃப்ஸ்டைல்

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் - ஆரஞ்சு சாலட்

Published On 2016-10-31 02:38 GMT   |   Update On 2016-10-31 02:38 GMT
காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் - ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேரட் - 3
ஆப்பிள் - 2
ஆரஞ்சு பழம் - 2
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு - 2 ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :

* ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.

* கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.

* இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.

* ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.

* அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.

* மிகவும் சத்தானது இந்த சாலட்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News