லைஃப்ஸ்டைல்
உருளைக்கிழங்கு, வெந்தயக்கீரையை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு துண்டுகள் - 200 கிராம்
வெந்தயக்கீரை - ஒரு கப்
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கடுகு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
* வெங்காயம், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்த பின், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.
* கீரை பாதியளவு வெந்ததும் இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் போட்டு 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்.
* சுவையான சத்தான மேத்தி உருளைக் கிழங்கு பொரியல் ரெடி.
* இதை சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.