லைஃப்ஸ்டைல்
சுவையான தேங்காய் - கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேங்காய், கொத்தமல்லியை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - கால் கப்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
புளி - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
* கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, புளி, இஞ்சி, ப.மிளகாய் போட்டு தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
* நன்றாக ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
* சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெ.
* இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.