லைஃப்ஸ்டைல்

சத்தான பாகற்காய் தயிர் பச்சடி

Published On 2016-09-24 04:49 GMT   |   Update On 2016-09-24 04:49 GMT
பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது பாகற்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4 
மஞ்சள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 மூடி
கடுகு - 1 தேக்கரண்டி (அரவை மற்றும் தாளிப்பதற்காக)
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 3 கப்
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :

* பாகற்காயை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

* தேங்காய், பச்சை மிளகாய், கடுகு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். 
* பிறகு அதில் அரைத்த கலவையை சேர்க்கவும். 

* நன்றாக கொதித்த பின் பெருங்காயம் சேர்த்து இறக்கவும். 

* நன்கு ஆறிய பிறகு தயிர் சேர்க்கவும். 

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் தயிர் கலவையில் கொட்ட வேண்டும்.

* சுவையான சத்தான பாகற்காய் தயிர் பச்சடி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News