ஆன்மிகம்
பட்டிவீரன்பட்டி அருகே சடையாண்டி கோவில் திருவிழா

பட்டிவீரன்பட்டி அருகே சடையாண்டி கோவில் திருவிழா

Published On 2021-10-28 07:36 GMT   |   Update On 2021-10-28 07:36 GMT
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதியின் கரையோரத்தில் பழமையான சடையாண்டி கோவிலில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதியின் கரையோரத்தில் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் நேற்று திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி சடையாண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகளை வெட்டி சமையல் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கறிவிருந்து நடந்தது.

இந்த விழாவில் அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News