ஆன்மிகம்
யாகம்

தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2021-09-02 05:52 GMT   |   Update On 2021-09-02 05:52 GMT
தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவில் அமைந்துள்ளது. பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், நெய், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News