ஆன்மிகம்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது
ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருமஞ்சனமும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட விசேஷ மாலையுடன் சாமிக்கு வழிபாடு நடந்தது.
முத்தியால்பேட்டை ராம கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி தினமும் காலை பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடை பெறுகிறது. மாலையில் விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது. முன்னதாக ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருமஞ்சனமும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட விசேஷ மாலையுடன் சாமிக்கு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தினமும் காலை பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடை பெறுகிறது. மாலையில் விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது. முன்னதாக ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருமஞ்சனமும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட விசேஷ மாலையுடன் சாமிக்கு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.