ஆன்மிகம்
தீ மிதி திருவிழா

அச்சரப்பாக்கம் மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா

Published On 2021-07-27 05:26 GMT   |   Update On 2021-07-27 05:26 GMT
அச்சரப்பாக்கம் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு தீ மிதி விழா, சாமி வீதிஉலா கும்பமிடுதல் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம், அலமேலுபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் 10 நாள் ஆடித்திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

ஊரடங்கு விதிகள் காரணமாக வீதியுலாயின்றி தினந்தோறும் சாமி கோவில் உலா நடக்கிறது. விழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு தீ மிதி விழா, சாமி வீதிஉலா கும்பமிடுதல் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா எஸ்.சரவணன்சாமியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News