ஆன்மிகம்
சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சேர்வைக்கார தெருவில் உள்ள சத்குரு ஸ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா நேற்று நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சேர்வைக்கார தெருவில் உள்ள சத்குரு ஸ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாய்பாபாவுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாய்பாபாவுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் சாய்பாபாவுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.