ஆன்மிகம்
ஜெனகை மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில் பூக்குழி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில் பூக்குழி திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. ஆகம விதிப்படி சண்முகவேல் பூசாரி அக்னி கரகம் அலங்காரம் செய்து கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் அம்மன் சன்னதியில் அக்னி கரகத்தை இறக்கி வைத்தார். அப்போது வெளியே இருந்த பக்தர்கள் குலவை போட்டு தங்களது பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். பூஜைகள் நடந்தன. இதில் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.