ஆன்மிகம்
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகம்

செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகம்

Published On 2021-04-05 04:35 GMT   |   Update On 2021-04-05 04:35 GMT
கும்பகோணம் செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் டி.எஸ். பரமேஸ்வர சிவாச்சாரியார், சரவணகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News