ஆன்மிகம்
திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

சீர்காழியில் வடபாதி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2021-02-13 03:43 GMT   |   Update On 2021-02-13 03:43 GMT
சீர்காழியில் வடபாதி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால் குடங்கள், அலகு காவடி, பறவை காவடி உள்ளிட்டவர்களுடன் புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி, ஈசானிய தெரு, வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
சீர்காழியில் வடபாதி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கீழ வீதியில் உள்ள கோமளவள்ளி அம்மன் கோவிலில் இருந்து பால் குடங்கள், அலகு காவடி, பறவை காவடி உள்ளிட்டவர்களுடன் புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி, ஈசானிய தெரு, வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திரவியப் பொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னர் அம்மன், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாலை கீழ வீதியில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி, அலகு காவடிகள் உடன் புறப்பட்டு கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News