ஆன்மிகம்
பாகூர் மூலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
பாகூரில் உள்ள பழமைவாய்ந்த மூலநாதர் வேதாம்பிகை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில் பவுர்ணமியோடு வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அன்று அனைத்து சிவாலயங்களிலும் ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை தினத்தன்று, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும். இந்த நாளில் ஆனந்த நடனம் புரியும் நடராஜப் பெருமானை வழிபடுவது முக்தியை வழங்கும் என்பது ஐதீகம்.
இதையொட்டி பாகூரில் உள்ள பழமைவாய்ந்த மூலநாதர் வேதாம்பிகை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.