ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது

Published On 2020-12-16 04:47 GMT   |   Update On 2020-12-16 04:47 GMT
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. வருகிற 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.

நேற்று காலை, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது.

இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதன்பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இன்று மார்கழி மாதம் தொடங்குவதால் சாமிக்கு தினந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News