ஆன்மிகம்
குணசீலம் பெருமாள் கோவிலில் சிறப்பு ஹோமம்
குணசீலத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் விஷ்ணு சுத்த ஹோமம் நடைபெற்றது. இதில் 108 வகையான மூலிகை பொருட்கள் போடப்பட்டு ஹோமம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி முசிறி அருகே குணசீலத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நேற்று விஷ்ணு சுத்த ஹோமம் நடைபெற்றது.
இதில் சீந்தப்பொடி, நாயுருவி,நெய், தேன், வெண்கடுகு உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் போடப்பட்டு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. ஹோமத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் செய்திருந்தார்.
இதில் சீந்தப்பொடி, நாயுருவி,நெய், தேன், வெண்கடுகு உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் போடப்பட்டு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. ஹோமத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் செய்திருந்தார்.