ஆன்மிகம்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் தேர்கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா: தேர் கட்டும் பணி தீவிரம்

Published On 2020-02-26 07:42 GMT   |   Update On 2020-02-26 07:42 GMT
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இதற்காக தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய கோவில்களிலும், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் ஆகிய கோவில்களிலும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறும்.

கும்பேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசிமக விழாவில் 5-ம் நாள் ஓலைசப்பரம், 7-ம் நாள் திருக்கல்யாணம், 8, 9-ம் ஆகிய நாட்களில் தேரோட்டமும், 22-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சிவன், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தேரில் எழுந்தருளி 2 நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்காக கும்பேஸ்வரர் கீழவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களை கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News