ஆன்மிகம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் சூரியபூஜை விழா

Published On 2019-04-27 05:53 GMT   |   Update On 2019-04-27 05:53 GMT
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று சூரியபூஜை நடைபெற்றது. இதில் கோபுர வாசல் வழியாக சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழுந்தது.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் போது சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்த போது பூஜை நடைபெற்றது.

அப்போது நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள சூரியபகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News