ஆன்மிகம்

நாகராஜா கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது

Published On 2017-07-25 04:15 GMT   |   Update On 2017-07-25 04:15 GMT
நாகர்கோவில் நாகராஜாகோவிலில் வருகிற 27-ந் தேதி ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நாகர்கோவில் நாகராஜாகோவிலில் வருகிற 27-ந் தேதி ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று மதியம் 12.48 மணிக்கு சிம்மராசியிலிருந்து ராகு பகவான் கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயருகின்றனர்.

இதையொட்டி நாகராஜாகோவிலில் அதிகாலை மகாகணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து ராகு- கேது ஹோமமும், மதியம் 12 மணிக்கு அஷ்டாபிஷேகமும், 12.40 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

ராகு- கேது பெயர்ச்சியையொட்டி நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பரிகாரம் மற்றும் அர்ச்சனை செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இணை ஆணையர் பாரதி தலைமையில், கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News